sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மக்களுக்கு தங்க படியில் அரிசி வழங்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்

/

மக்களுக்கு தங்க படியில் அரிசி வழங்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்

மக்களுக்கு தங்க படியில் அரிசி வழங்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்

மக்களுக்கு தங்க படியில் அரிசி வழங்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்


ADDED : டிச 24, 2024 04:48 AM

Google News

ADDED : டிச 24, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: மார்கழி மகா அஷ்டமியை முன்னிட்டு நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் அஷ்டமி பிரதட்சணமாக சிறப்பு அலங்காரத்தில், வெள்ளி வாகனங்களில் நகர் வீதிகளில் உலா வந்தனர்.

மகா அஷ்டமி காரணமாக மக்களுக்கு படி அளக்கும் ஐதீகப்படி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கையில் தங்கப்படியுடன் வீதி உலா வந்தார். பக்தர்கள் சுவாமிகளுக்கு பூஜை செய்தனர். காலையில் புறப்பட்ட பஞ்சமூர்த்திகள் மாலையில் திருக்கோவிலை வந்தடைந்தனர். சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டாயிரம் பக்தர்களுக்கு கோவிலில் தங்கப்படியில் அரிசி வழங்கப்பட்டது. அரிசியை பெற்று மக்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.






      Dinamalar
      Follow us