ADDED : டிச 24, 2024 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி செஞ்சை புனித தெரசாள் சர்ச்சில் அன்பிய கிறிஸ்துமஸ் திருவிழா நடந்தது.
தேவகோட்டை மறை வட்ட அதிபர் சந்தியாகு தலைமையில் செய்தி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 25 அன்பியத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து இன்றையமனித வாழ்க்கை எதை நோக்கிச் செல்கிறது பணத்தை தேடியா பாசத்தை தேடியா என்ற தலைப்பில் தேவகோட்டை மகாராஜன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது.