sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் மீண்டும் பழுது

/

சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் மீண்டும் பழுது

சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் மீண்டும் பழுது

சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் மீண்டும் பழுது


ADDED : ஜன 01, 2025 07:29 AM

Google News

ADDED : ஜன 01, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் மீண்டும் பழுதானதால் அவசரத்திற்கு ரோயாளிகளை மதுரைக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் டிச.30 முதல் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் பழுதாகியுள்ளது.இதனால் அவசர சிகிச்சை மேற் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மூளை, தண்டுவடம், நரம்பு, எலும்புகளில் ஏற்படும் பாதிப்பை எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மூலம் தான் கண்டறிய முடியும். மருத்துவமனைக்கு மூளையில் பிரச்னை, மூட்டு வலி, தசை பிரச்னை, நரம்பியல் பிரச்னைகளுக்காக ஸ்கேன் எடுக்க மாவட்டம் முழுவதிலும் இருந்து 30க்கும் மேற்பட்டோர் தினமும் வருகின்றனர்

இதில் முதல்வரின் காப்பீட்டு திட்டம் இருந்தாலும் பணம் கொடுத்து எடுப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படுகிறது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களாக எம்.ஆர்.ஐ., ஸ்கேனில் பழுது ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் மதுரை அரசு மருத்துவ மனைக்கு செல்லும் சூழல் உள்ளது. மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் உடனடியாக பழுதடைந்த எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதேபோல் எம்.ஆர்.ஐ.,ஸ்கேன் பழுதானது. இந்த வருடத்தில் மட்டும் இது 3வது முறையாக பழுதாகியுள்ளது.

எம்.ஆர்.ஐ., ஸ்கேன் நிர்வாகத்தினர் கூறுகையில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரத்தில் உள்ள ஹீலீயம் காஸ் தீர்ந்துள்ளது. ஹீலீயம் காஸ் மருத்துவமனைக்கு மும்பையில் இருந்து தான் வரவேண்டியுள்ளது. அவை வர ஒரு வாரம் ஆகும். அது வந்த பிறகு தான் சரிசெய்யப்படும் என்றனர்.






      Dinamalar
      Follow us