/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
என். கீழையூர் மஞ்சுவிரட்டு 500 காளைகள் பங்கேற்பு
/
என். கீழையூர் மஞ்சுவிரட்டு 500 காளைகள் பங்கேற்பு
ADDED : மே 09, 2025 01:46 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே என். கீழையூரில் சூளைக் கருப்பர்,ஆதின மிளகி அய்யனார், பொன்அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
கிராமத்தினர் கிராம கோயில் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து காலை 11:00 மணிக்கு மஞ்சுவிரட்டு தொழுவிற்கு வந்து காளைகள் அவிழ்த்தனர். 200க்கும் மேற்பட்ட காளைகள் தொழுவிலிருந்து விரட்டப்பட்டு கூட்டம் கூட்டமாக சென்றன. பங்கேற்ற காளைகளுக்கு வேட்டி வழங்கப்பட்டது.
தொடர்ந்து நூற்றுக்கணக்கான காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்க்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் சிலர் காயமடைந்தனர். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக ஏற்பாட்டாளர்கள் 5 பேர் மீது வழக்கு பதிந்து நாச்சியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.