/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நம்பி நாகம்மாள் கோயில் முளைப்பாரி உற்ஸவ விழா
/
நம்பி நாகம்மாள் கோயில் முளைப்பாரி உற்ஸவ விழா
ADDED : ஜூலை 17, 2025 11:35 PM
மானாமதுரை: மானாமதுரை நம்பி நாகம்மாள் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா ஜூலை 26 அன்று நடக்கிறது.
தாயமங்கலம் ரோட்டில் உள்ள நம்பி நாகம்மாள் கோயிலில் ஆடி முளைப்பாரி உற்சவ விழா நாளை (ஜூலை 19) காலை 10:35 மணிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறும். ஜூலை 26 அன்று காலை 8:00 மணிக்கு பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து சந்தனக்குடம், அக்னிச்சட்டி,பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர். அன்று இரவு 7:00 மணிக்கு பக்தர்கள் கரகம் எடுத்து நேர்த்தி செலுத்துவர்.
ஜூலை 27 அன்று மாலை 6:00 மணிக்கு நகரின் முக்கிய வீதிகளில் முளைப்பாரி ஊர்வலமாக சென்று, அலங்கார குளத்தில் கரைக்க உள்ளனர். ஜூலை 28 ல் நாக சதுர்த்தியை முன்னிட்டு 108 கலஷாபிஷேக பூஜை நடைபெறும். விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.