/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேசிய தொழில்நுட்ப கலந்தாய்வரங்கம்
/
தேசிய தொழில்நுட்ப கலந்தாய்வரங்கம்
ADDED : அக் 19, 2024 11:44 PM
திருப்புத்துார் : திருமயம் லேனாவிலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்துறை சார்பில் தேசிய தொழில்நுட்ப கலந்தாய்வரங்கம் நடந்தது.
கல்விக் குழும தலைவர்பிளாரன்ஸ் ஜெயபரதன் தலைமை வகித்தார். இயக்குனர் ஜெய்சன் கே.ஜெ யபரதன், கல்வி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விவியன் ரேச்சல் ஜெய்சன் மற்றும் முதல்வர்ப.பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.
துறைத்தலைவர் மற்றும் முதன்மையர் கே.ஸ்ரீனிவாசன் வரவேற்றார்.
கோவை, மெட்ஸ்பை ஹெல்த்கேர் அண்ட் இன்ஜினியரிங் சொலுஷன்ஸ் நிறுவனர் சி.இ.ஓ., ஜி.குருபிரசாத் மின்னணுவியல் நவீன தெரழில்நுட்பங்கள் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
முதன்மையர்(ஐசிடி) எஸ்.ராபின்சன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.அருண் குமார், சி.பழனியப்பன் செய்தனர்.

