ADDED : ஏப் 04, 2025 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்தூர் கீழரத வீதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கை விழா நடந்தது. இது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வட்டார கல்வி அலுவலர்கள் குமார், சாந்தி, பேரூராட்சி தலைவர் கோகிலாராணி ஆகியோர் தலைமை வகித்தனர். புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து, சாக்லெட் வழங்கியும் வரவேற்றனர். பெற்றோர் சார்பில் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கினர்.
தலைமை ஆசிரியை வளர்மதி வரவேற்றார். ஆண்டு விழாவில் ஆசிரியை ஜெனிபர் பாத்திமா ஆண்டறிக்கை வாசித்தார். கவுன்சிலர் சரண்யா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் அழகுராணி பங்கேற்றனர். ஆசிரியர் அழகு மணிகண்டன் நன்றி கூறினார்.

