ADDED : பிப் 09, 2026 05:05 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் வடமஞ்சுவிரட்டு நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15 காளைகளும் 135 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.
15 சுற்றுகளாக தலா 15 நிமிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு ஒவ்வொரு சுற்றுக்கும் 9 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பூமணி, பால சுப்பிரமணியன், பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், பேரூர் செயலாளர் கதிர்வேல், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் புகழேந்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோகரன், கவுன்சிலர் ஜெயக்குமார் பங்கேற்றனர்.
* திருப்புவனத்தில் த.மா.கா., தலைவர் ஜி.கே. வாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த வடமஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் பலர் காயமுற்றனர்.
இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 13 காளைகள் பங்கேற்றன. ஒரு காளைக்குஒன்பது வீரர்கள் வீதம் களம் இறக்கப்பட்டு, ஒரு காளைக்கு 20 நிமிடம் ஒதுக்கினர்.
இதில் காளையை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளை உரிமையாளர்களுக்கும் சில்வர் அண்டா, பித்தளை குத்துவிளக்கு, சேர், ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை த.மா.கா. மாநில தொண்டரணி தலைவர் அயோத்தி, நகர் தலைவர் பாரத்ராஜா செய்திருந்தனர்.

