ADDED : ஜன 07, 2026 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் சாந்தி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். முத்துலட்சுமி நிதி உதவி திட்டத்தை சமூக நலத்துறைக்கு மாற்ற வேண்டும். இலவச குடியிருப்புடன் கூடிய துணை சுகாதார நிலையம் அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

