ADDED : ஆக 21, 2026 12:15 AM

அ நிறம் | அளவு
சிவகங்கை: அரசு மருத்துவமனையில் டாக்டர் முதல் நர்சுகள் வரை பணி நிரவல் முறையை கைவிடக்கோரி சிவகங்கையில் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் காலை நேர ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சங்க மாவட்ட செயலாளர் தேவசேனா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மாலதி முன்னிலை வகித்தார். நர்சுகளுக்கு பணிவரன்முறை வழங்க வேண்டும். பணிநிரவல் முறையை கைவிட வேண்டும்.
தொகுப்பூதிய முறையை ரத்து செய்து நிரந்தர பணியிடம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்க பொருளாளர் ராணி நன்றி கூறினார்.
