sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 கிராபைட் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

/

 கிராபைட் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

 கிராபைட் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

 கிராபைட் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு


ADDED : டிச 30, 2025 05:44 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூவந்தி: பூவந்தி அருகே இலுப்பக்குடியில் கிராபைட் தொழிற்சாலைக்கு விவசாய நிலத்தை கையகப் படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

பூவந்தி அருகே உள்ள இலுப்பகுடியில் நெல், வாழை, கரும்பு, தென்னை, தர்ப்பூசணி உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. விவசாயம் தவிர கறவை மாடுகள், வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்டவைகளும் வளர்த்து வருகின்றனர். 2011ம் ஆண்டு இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர் களுக்கான பயிற்சி முகாம் அமைப்பதற்கு 400 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டது.

இந்தாண்டு தொடக்கத்தில் சிப்காட் அமைக்க 800 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் அதிகாரிகள் கிராபைட் தொழிற்சாலை மற்றும் குப்பை கிடங்கு அமைக்க உள்ளதாக கூறி நிலத்தை அளவீடு செய்து உள்ளனர். கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

கிராபைட் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கலெக்டரிடம் நேரில் சென்று மனு அளித்துள்ளனர்.

அதிகாரிகள் கிராபைட் தொழிற்சாலைக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பத்து நாட்களாக இலுப்ப குடி ஊராட்சி அலுவலக வாசலில் கிராமமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us