ADDED : ஜன 30, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : திருப்புவனம் பேரூராட்சி 1 வது வார்டு தேரடி வீதியில் தனியார் மதுபானக்கூடம் திறந்தால் புஷ்பவனேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தேரடி வீதியில் உள்ள குடியிருப்பு வாசிகள், பெண்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்று கூறி கவுன்சிலர் எம்.அயோத்தி தலைமையில், கே.முகம்மது ஆரீஸ் உட்பட திருப்புவனம் பேரூராட்சி மக்கள் நேற்று சிவகங்கை கோட்டாட்சியரிடம் மதுபானக்கூடம் துவக்க அனுமதிக்க கூடாது என புகார் அளித்தனர்.