ADDED : ஏப் 15, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் முருகன் சன்னதியில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர்.
இக்கோயிலில் ஏப்.,8ம் தேதி சுப்பிரமணியர் சன்னதியில் காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை துவக்கினர். தமிழ்ப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணிக்கு கோட்டை கருப்பண்ண சுவாமி கோயிலில் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர். சந்தனக்காப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.