தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பனை மரத்திற்கு தீ

பனை மரத்திற்கு தீ

பனை மரத்திற்கு தீ


ADDED : ஆக 09, 2025 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2025 03:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள கோவிலுாரில், பனை மரங்களுக்கு தீ வைத்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் கோவிலுார் அருகே உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கண்மாய் பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன.

நேற்று இப்பகுதியில் பல பனைமரங்கள் தீப்பிடித்து எரிந்தது. தமிழகத்தில் பனை மரங்களை காத்திட அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி பெற வேண்டும்.

உரிய அனுமதி கிடைக்காது என்பதால் சிலர் இதுபோன்று பனை மரத்திற்கு தொடர்ந்து தீ வைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மரத்திற்கு தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us