sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பார்வையற்ற பெண்ணுக்கு பட்டா

/

பார்வையற்ற பெண்ணுக்கு பட்டா

பார்வையற்ற பெண்ணுக்கு பட்டா

பார்வையற்ற பெண்ணுக்கு பட்டா


ADDED : செப் 19, 2024 04:48 AM

Google News

ADDED : செப் 19, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: இளையான்குடியில் கண் பார்வையற்ற பட்டதாரி பெண்ணுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை கலெக்டர் ஆஷாஅஜித் வழங்கினார்.

கீழநெட்டூரை சேர்ந்த மூர்த்தி - ராஜேஸ்வரி தம்பதி மகள் சரண்யா 24. பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர். மூர்த்தி 7 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். மதுரை அரசு மகளிர் கல்லுாரியில் தாய் ராஜேஸ்வரியின் உதவியுடன் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்தார். சொந்த ஊரான கீழநெட்டூரில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

தனக்கு வேலை வழங்க வேண்டியும். 1.5 சென்ட் இடத்தில் குடிசை வீட்டில் வசிக்கும் தனக்கு வாழ்வாதாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். நேற்று இளையான்குடி பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் மூலம் கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வு நடத்தினார்.

இப்பட்டதாரி பெண்ணின் நிலையை அறிந்து பட்டதாரி பெண் பெயரில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கியதோடு, அரசின் கனவு இல்லம் திட்டம் மூலம் ரூ.3.5 லட்சத்தில் வீடு கட்டிதருவதாக உறுதி அளித்தார்.






      Dinamalar
      Follow us