sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பள்ளி வளாகத்தைசுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டம்

/

பள்ளி வளாகத்தைசுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டம்

பள்ளி வளாகத்தைசுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டம்

பள்ளி வளாகத்தைசுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டம்


ADDED : பிப் 03, 2025 05:27 AM

Google News

ADDED : பிப் 03, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை அருகே பெரியகோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் சுற்று வட்டார கிராமப் பகுதிகளை சேர்ந்த 190க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 18க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு தனித்தனியாக அறைகள் உள்ள நிலையில், ஜன., 27 அன்று ஆசிரியர்கள் அறையை சூறையாடிய சிலர் டேபிளிலும், அறையின் கீழ் பகுதிகளிலும் மலம் கழித்து விட்டு சென்றுள்ளனர்.

பள்ளியின் வளர்ச்சியை பிடிக்காத சிலர் இதுபோன்ற ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கூறியதாவது, இப்பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்.

முதற்கட்டமாக பள்ளி வளாகத்தைசுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.






      Dinamalar
      Follow us