sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தேவகோட்டையில் டிச.21ல் ஆக்கிரமிப்பு அகற்ற திட்டம்

/

தேவகோட்டையில் டிச.21ல் ஆக்கிரமிப்பு அகற்ற திட்டம்

தேவகோட்டையில் டிச.21ல் ஆக்கிரமிப்பு அகற்ற திட்டம்

தேவகோட்டையில் டிச.21ல் ஆக்கிரமிப்பு அகற்ற திட்டம்


ADDED : டிச 19, 2024 04:49 AM

Google News

ADDED : டிச 19, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை நகரில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. ராம்நகர் பகுதியில் இருந்து ஒத்தக்கடை வரை ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. தியாகிகள் ரோட்டில் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட நடைபாதையில் கடைக்காரர்கள் பொருட்களை வைத்து ஆக்கிரமித்து இருந்ததால் அந்த வழியாக பள்ளிக்கு செல்ல முடியாமல மாணவர்கள் நடுரோட்டில் செல்லும் நிலை உருவானது.

சில தினங்களுக்கு முன் புதிய டி. எஸ்.பி. கவுதம் பொறுப்பேற்றார். புதிய டி.எஸ்.பி., கவனத்திற்கு தேவகோட்டை ஆக்கிரமிப்பு பிரச்னை கொண்டு செல்லப்பட்டது.

டி.எஸ். பி. கவுதம் போக்குவரத்து போலீசாருடன் ஆய்வு செய்தார். தியாகிகள் ரோட்டில் நடை பாதையில் இருந்த ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். டிச. 21 ந்தேதி போலீசார், நகராட்சி அலுவலர், துணையோடு ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அறிவித்தார்.






      Dinamalar
      Follow us