ADDED : ஏப் 17, 2026 11:19 PM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்:கும்மங்குடி விவேகானந்தா குளோபல் நர்சிங் கல்லூரியில் ‛விளக்கேற்றும் விழா மற்றும் உறுதிமொழியேற்பு விழா' நடந்தது.
கல்லூரி தலைவர் எம்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். முதல்வர் மாலதி வரவேற்றார். கல்லூரி இயக்குநர் ஏ.உருமநாதன் வாழ்த்துரையாற்றினார். செவிலியர் பயிற்சி பெறும் முதலாமாண்டு மாணவிகளுக்கு செவிலியர் பணி உன்னதத்தையும், அறிவு,கருணையையும் உணர்த்தும்' வகையில் விழா நடந்தது. நைட்டிங்கேல் அம்மையாரை நினைவுகூறும் வகையில் மாணவிகள் விளக்கேற்றி செவிலியர் பணிகளுக்கான உறுதிமொழி ஏற்றனர்.
