நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரோட்டை கடக்க முயன்றவர் பலி
சிவகங்கை: ஒக்கூர் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன் மகன் கணேசன் 45. இவர் நேற்று காலை சிவகங்கை - திருப்புத்துார் நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். ஒக்கூர் அருகே ரோட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த வாகனம் மோதியதில் கணேசன் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலை மிரட்டல்
சிவகங்கை: பிரவலுார் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் 48. இவர் பிரவலுார் மீன் பண்ணை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் டூவீலரில் வந்து கணேசனை அசிங்கமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கணேசன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.