sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டிரைவர் கொலை வழக்கில் இருவரிடம் போலீசார் விசாரணை

/

டிரைவர் கொலை வழக்கில் இருவரிடம் போலீசார் விசாரணை

டிரைவர் கொலை வழக்கில் இருவரிடம் போலீசார் விசாரணை

டிரைவர் கொலை வழக்கில் இருவரிடம் போலீசார் விசாரணை


ADDED : ஏப் 16, 2025 08:39 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 08:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: இளையான்குடி அருகே வேலடிமடை பஸ் ஸ்டாப்பில் துாங்கிக் கொண்டிருந்த டிரைவரை கொலை செய்த வழக்கில் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிற நிலையில் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வேலடிமடை பஸ் ஸ்டாப்பில் துாங்கிக் கொண்டிருந்த திருவாரூர் மாவட்டம் சிறுகளத்துார் கிராமத்தைச் சேர்ந்த கதிரடிக்கும் இயந்திர டிரைவர் மகேஷை ஏப்.14ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு 2 டூவீலர்களில் வந்தவர்கள் அவரை அரிவாளால் வெட்டி முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

சத்தம் கேட்டு வந்த கிளீனர் நவீனையும் அரிவாளால் வெட்டிவிட்டு கும்பல் தப்பியது. இளையான்குடி போலீசார் இக்கொலை குறித்து டி.எஸ்.பி., அமலஅட்வின் மற்றும் போலீசார்கள் தலைமையில் 3க்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து விசாரித்தனர். மானாமதுரை மூங்கிலூரணி பகுதியை சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவரையும், மற்றொருவரையும் பிடித்து விசாரிக்கின்றனர்.மேலும் இக்கொலை வழக்கில் தொடர்புடைய 3க்கும் மேற்பட்டோரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us