sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நாட்டரசன்கோட்டையில் ஜன.23ல் செவ்வாய் பொங்கல் விழா  

/

நாட்டரசன்கோட்டையில் ஜன.23ல் செவ்வாய் பொங்கல் விழா  

நாட்டரசன்கோட்டையில் ஜன.23ல் செவ்வாய் பொங்கல் விழா  

நாட்டரசன்கோட்டையில் ஜன.23ல் செவ்வாய் பொங்கல் விழா  


ADDED : ஜன 15, 2024 10:57 PM

Google News

ADDED : ஜன 15, 2024 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் ஜன., 23 அன்று செவ்வாய் பொங்கல் விழா நடைபெற உள்ளது.நாட்டரசன்கோட்டையை சேர்ந்த நகரத்தார்கள் ஆண்டுதோறும் தை பொங்கலில் மாட்டு பொங்கலுக்கு அடுத்து வரும் செவ்வாய் அன்று கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் முன் பொங்கல் வைத்து வழிபடும், செவ்வாய் பொங்கல் விழா நடத்துவார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு செவ்வாய் பொங்கல் ஜன., 23 ல் நடக்கிறது. நாட்டரசன்கோட்டையை பிறப்பிடமாக கொண்ட நகரத்தார்கள் வணிகம், பணி காரணமாக வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.

செவ்வாய் பொங்கல் அன்று அனைவரும் வந்து, கோயில் முன் வெண்பொங்கல் வைத்து கண்ணுடைய நாயகி அம்மனை வழிபடுவர். இதற்காக ஜன., 23 அன்று மதியம் நகரத்தார் குடும்பத்தினர் புள்ளி வாரியாக குடும்ப தலைவரின் பெயர்களை சீட்டில் எழுதி வெள்ளி குடத்தில் சீட்டுக்களை போட்டு குலுக்கி எடுப்பர். முதலில் பெயர் வருவோரின் குடும்பத்தினர் மட்டும், கோயில் மரியாதையுடன் மண் பானையில் முதல் பொங்கலை வைப்பர். இந்த பானையில் அனைவரும் பால் ஊற்றுவர். இதற்கு அடுத்தபடியாக அனைத்து குடும்பத்தினரும் பொங்கல் வைப்பார்கள்.

இங்கு அனைவரும் வெண்பொங்கல் மட்டுமே வைத்தும், கண்ணுடைய நாயகி அம்மனுக்கு கிடா வெட்டி வழிபாடு நடத்துவர். செவ்வாய் பொங்கல் விழாவை முன்னிட்டு தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணகணேசன், நகரத்தார்கள் விழா ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us