sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பூலாங்குறிச்சி. கல்வெட்டு' எழுத்துக்கள் அழிகிறது; தொல்லியல் துறை பாதுகாக்குமா?

/

பூலாங்குறிச்சி. கல்வெட்டு' எழுத்துக்கள் அழிகிறது; தொல்லியல் துறை பாதுகாக்குமா?

பூலாங்குறிச்சி. கல்வெட்டு' எழுத்துக்கள் அழிகிறது; தொல்லியல் துறை பாதுகாக்குமா?

பூலாங்குறிச்சி. கல்வெட்டு' எழுத்துக்கள் அழிகிறது; தொல்லியல் துறை பாதுகாக்குமா?


UPDATED : ஏப் 23, 2025 08:16 AM

ADDED : ஏப் 23, 2025 05:48 AM

Google News

UPDATED : ஏப் 23, 2025 08:16 AM ADDED : ஏப் 23, 2025 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை மாவட்டத்தில் மலைசூழ்ந்த எல்லைக் கிராமம் பூலாங்குறிச்சி. மனிதன் வாழ்ந்த குகைகள் நிறைந்த தொன்மையான மலைப்பகுதி உள்ளது.

அதில் ஒரு குன்றின் சரிவில் தொன்மையான கல்வெட்டுக்களிலேயே மிகவும் பெரிய கல்வெட்டு உள்ளது. கி.பி.5ம் நுாற்றாண்டுக்கு முற்பட்ட இக்கல்வெட்டு 'பூலாங்குறிச்சி கல்வெட்டு' என்று அழைக்கப்படுகிறது.

45 அடி நீளமும் 6 அடி உயரமும் கொண்ட இக்கல்வெட்டு 3 பகுதிகளாக வடிக்கப்பட்டுள்ளன.

அதிலுள்ள எழுத்து முறை, தமிழ் பிராமி எழுத்திலிருந்து தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்துக்கு மாறி வந்த நிலையைக் காட்டுகிறது என்று கல்வெட்டியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் கிடைத்துள்ள தொன்மையான கல்வெட்டுக்களில் கி.பி. 3 முதல் கி.பி. 9ஆம் நுாற்றாண்டு வரையிலான காலத்தை சேர்ந்த கல்வெட்டுக்கள் 1000க்குள் தான் உள்ளன. அதில் பெரும்பாலான கல்வெட்டுக்கள் ஒரு சில வரிகள் மட்டுமே உள்ளன. அதற்கு மாறாக மிக விரிவானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாக பூலாங்குறிச்சிக் கல்வெட்டு உள்ளது. களப்பிரர் காலம், தமிழகத்தில் நிலவிவந்த நில நிர்வாக அமைப்பு பற்றிய வரலாறு, தமிழ் எழுத்து முறையின் வரலாறு எனப் புதிய தகவல்களை கொண்டுள்ளது.

பௌத்த சமணத்தை ஆதரித்த களப்பிரர் மன்னர்களின் ஆட்சியில் பிராமணர்களுக்கு உரிமையாக்கப்பட்ட நிலம் குறித்த பிரம்மதேயம் எனப்படும் கல்வெட்டு ஆகும். தமிழ்நாட்டில் நிலம் தொடர்பான தகவல் உள்ள தொன்மையான கல்வெட்டும் இதுவே.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுக்கள் எந்தவிதப் பாதுகாப்போ, பராமரிப்போ இன்றி உள்ளது. தமிழகத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டன. ஆனால் பெயரளவில் 'பூலாங்குறிச்சி கல்வெட்டு' என்று அடையாள போர்டு மட்டுமே உள்ளது.

மழையிலும், வெயிலிலும் தற்போதும் பாதிக்கப்பட்டு குன்றின் மேல்பகுதி தேய்ந்து வருகிறது. இதனால் கல்வெட்டுக்களின் ஒரு பகுதி படிக்க முடியாத அளவுக்கு அழிந்துவிட்டது. இந்நிலை தொடர்ந்தால் அனைத்து எழுத்துக்களும் அழிந்து விடும் வாய்ப்பு உள்ளது.

புதுக்கோட்டை குடுமியான்மலை இசைக் கல்வெட்டுகளைப் பாதுகாக்க இந்தியத் தொல்லியல் துறையினர் மண்டபம் போன்ற அமைப்பைக் கட்டியிருக்கிறது. அதுபோலப் பூலாங்குறிச்சி கல்வெட்டு மீதும் கட்டலாம்.

கல்வெட்டுக்களில் உள்ள தகவலை தெரிவிக்கும் அறிவிப்பு பலகையையும் நிறுவி, பாதுகாவலர், வழிகாட்டியையும் நியமிக்க வேண்டும். வரலாறு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் தேவையான வசதிகளை அப்பகுதியில் ஏற்படுத்தலாம்.

தொன்மையை உணர்த்தும் ஆதாரம்

வரலாறு கூறும் கல்வெட்டுக்கள் சரியான வரலாற்றை எழுதுவதற்கு உதவும் மிகவும் நம்பகமான ஆதாரம் கல்வெட்டு ஆகும். ஆங்கிலேயர்களால் 1784ல் கல்வெட்டு சேகரிக்கும் பணி துவங்கியது. மேலும் கல்வெட்டை படி எடுத்து பதிவும் செய்யப்பட்ட ஆவணமாக்கினர்.இன்று வரை தொல்லியல் துறையினர் மற்றும் ஆர்வலர்கள் மூலம் தொடர்கிறது.
கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களை காலத்திற்கேற்ப தமிழ் பிராமி, வட்டெழுத்து மற்றும் தமிழ் எழுத்து என்று வகைப்படுத்தியுள்ளனர். இதுவரை நாடளவில் கண்டறியப்பட்டுள்ள 80 ஆயிரம் கல்வெட்டுக்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.அதாவது இந்தியாவில் கண்டறியப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் பாதியளவு கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டில் தான் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கி.மு. 3 ஆம் நுாற்றாண்டு முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த 93 தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் பூலாங்குறிச்சி கல்வெட்டும் ஒன்று.தமிழின் தொன்மையை உலகிற்கு உணர்த்தும் முக்கியமான ஆதாரமாக உள்ளது.








      Dinamalar
      Follow us