ADDED : ஜன 28, 2026 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தபால் துறையில் ஆட்குறைப்பை கைவிட வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் உள்ள மானாமதுரை, திருப்புத்துார் துணை தபால் நிலையத்தை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். தபால்துறையில் ஆட்குறைப்பு திட்டத்தை கைவிட வேண்டும். அலுவலக கூட்டத்திற்கு வரும் தபால் ஊழியர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அகில இந்திய அஞ்சல் கிராமிய ஊழியர் சங்க செயலாளர் செல்வன் தலைமை வகித்தார்.
நடராஜன் முன்னிலை வகித்தார். அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க துணை செயலாளர் நாகலிங்கம் நன்றி கூறினார்.

