/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மண்பாண்ட கைவினை பொருள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு
/
மண்பாண்ட கைவினை பொருள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு
மண்பாண்ட கைவினை பொருள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு
மண்பாண்ட கைவினை பொருள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு
ADDED : ஜன 11, 2026 05:20 AM
மானாமதுரை: மானாமதுரை மண்பாண்ட கைவினை பொருட்களை தயாரிக்கும் பெண்களுக்கு வழங்கப்பட்ட 2 மாத பயிற்சி நிறைவு விழாவில் மின் மோட்டார் வழங்கப்பட்டது.
மானாமதுரையில் தயாரிக்கப்படும் மண்பாண்டங்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜவுளித் துறையின் கைவினைப் பொருட்கள் வளர்ச்சி திட்டம் மற்றும் தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் சார்பில் 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மண்பாண்ட கைவினைப் பயிற்சி 2 மாதமாக வழங்கப்பட்டது.
முதுநிலை மண் பாண்டக் கலை பயிற்சி யாளர் ராஜகோபால் தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது.
நிறைவு விழாவில் பயிற்சியை முழுமையாக முடித்த பெண்களுக்கு பூம்புகார் நிறுவனம் சார்பில் மண்பாண்டப் பொருட்களை தயாரிக்க பயன்படும் மின் மோட்டார், சான்றிதழ்களை எம்.எல்.ஏ., தமிழரசி, பூம்புகார் நிறுவன அதி காரிகள் வழங்கினர்.

