ADDED : அக் 19, 2025 04:18 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதி சிவன் கோயில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி, சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதையொட்டி நேற்று நந்தீஸ்வரருக்கு அபிஷேகங்களும் சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது.
பிரான்மலை திருக் கொடுங்குன்றநாதர், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர், முறையூர் மீனாட்சி சொக்கநாதர், கரிசல்பட்டி கைலாசநாதர், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
மானாமதுரை:- மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற சனிப்பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்வளாகத்தை வலம் வந்தனர்.
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர், சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயில்களிலும் விழா நடந்தது.