sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோயிலில்களில் பிரதோஷ விழா

/

கோயிலில்களில் பிரதோஷ விழா

கோயிலில்களில் பிரதோஷ விழா

கோயிலில்களில் பிரதோஷ விழா


ADDED : ஜன 28, 2025 05:29 AM

Google News

ADDED : ஜன 28, 2025 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி சிவன் கோயில்களில் நடைபெற்ற தை பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற தை பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து வெள்ளி உற்சவர் சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்வளாகத்தை சுற்றி 3 முறை வலம் வந்தனர்.

சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் சுவாமிக்கு மலர்கள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களால் அர்ச்சனை செய்தனர்.பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றன.

*இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்,சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, பூஜைகள் நடைபெற்றது.

* சிங்கம்புணரி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் நேற்று மாலை 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், திருநீறு, பால் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்களும் சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது.பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில்களிலும், கரிசல்பட்டி கைலாசநாதர், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில்களிலும் வழிபாடு நடந்தது.

* திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

நேற்று மாலை 4:30 மணிக்கு சண்டிகேஸ்வரருக்கு பாஸ்கர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் பூஜை நடந்தது. தொடர்ந்து திரவியங்களால் நந்திதேவருக்கும், உற்ஸவ சுவாமி,அம்பாள் ஆகியோருக்கு அபிேஷகம் நடந்தது. பின்னர் மூலவருக்கு பூஜை,ஆராதனைகள் நடந்தன.






      Dinamalar
      Follow us