ADDED : அக் 27, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை,: மானாமதுரை நகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பான கூட்டம் நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் ராம்நகர்,அண்ணாமலை நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள் மற்றும் சுய உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பருவமழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது சுகாதார ஆய்வாளர்பாலமுருகன் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.