ADDED : அக் 03, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: பருவமழை துவங்க உள்ளதை அடுத்து மானாமதுரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடந்தது.
மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். குளத்து நீரில் தத்தளிப்பவரை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றி வருவது, தண்ணீரில் அடித்துச் செல்பவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, மழையினால் இடிந்த கட்டடங்களில் உள்ளே சிக்கிக் கொண்டவர்களை மீட்பது போன்று பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டனர்.