நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம்புதுவயல் பகுதியை சேர்ந்தவர் சேகர் 61. பெயின்டர். 2016 டிச.31ல் 7 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்தார்.
சிறுமியின் பெற்றோர் சாக்கோட்டை போலீசில்புகார் அளித்தார். போலீசார் சேகரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றதில் நடந்தது. வழக்கை நீதிபதி கோகுல்முருகன் விசாரித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட சேகருக்கு 7 வருடம் சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.