sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 மதுரையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மடப்புரத்தில் ஒருவர் கைது போலீஸ் காரை மறித்து போராட்டம்

/

 மதுரையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மடப்புரத்தில் ஒருவர் கைது போலீஸ் காரை மறித்து போராட்டம்

 மதுரையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மடப்புரத்தில் ஒருவர் கைது போலீஸ் காரை மறித்து போராட்டம்

 மதுரையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மடப்புரத்தில் ஒருவர் கைது போலீஸ் காரை மறித்து போராட்டம்


ADDED : நவ 24, 2025 12:38 AM

Google News

ADDED : நவ 24, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் திருமண வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மதுரை போலீசார் கைது செய்த போது திருமண வீட்டார் போலீஸ் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்புவனம் அருகே கே.பெத்தானேந்தலில் நவ., 13 ல் பாலமுருகன் பாட்டி வீராயி வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பூவந்தி போலீசார் இவ்வழக்கு தொடர்பாக பாலகிருஷ்ணன் 32, செண்பகமூர்த்தியை 23, கைது செய்தனர். இந்தவழக்கில் நந்தகுமார் 20, என்பவரை தேடி வந்தனர். அன்றே பாலமுருகன் தரப்பினர் 5 டூவீலர்களில் மதுரை சிலைமான் போலீஸ் எல்கைக்குட்பட்ட கல்மேடு நந்தகுமார் வீட்டிற்கு சென்று பெட்ரோல் குண்டு வீசியதுடன் வாசலில் நின்ற டூவீலர், ஆட்டோக்களை சேதப்படுத்தினர்.

இதுகுறித்து நந்தகுமாரின் தாயார் பூமாதேவி புகாரின்படி சிலைமான் போலீசார் பெத்தானேந்தல் பிரகாஷ், முகேஷ்கண்ணன், வெங்கட்டி உட்பட 7 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

நேற்று சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் நடந்த போலீசார் வீட்டு திருமணத்தில் பங்கேற்க பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட ராஜபாண்டி பங்கேற்றார். இதை அறிந்த மதுரை சிலைமான் இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் மடப்புரத்தில் அவரை கைது செய்து காரில் ஏற்றினர். அப்போது திருமண வீட்டார் காரை மறித்து ராஜபாண்டியை விடுவிக்க கோரி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துகுமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வேறு பாதையில் கைது செய்யப்பட்டவரை மதுரை போலீசார் காரில் அழைத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us