sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

புரட்டாசி பிரமோத்ஸவ திருக்கல்யாணம் 

/

புரட்டாசி பிரமோத்ஸவ திருக்கல்யாணம் 

புரட்டாசி பிரமோத்ஸவ திருக்கல்யாணம் 

புரட்டாசி பிரமோத்ஸவ திருக்கல்யாணம் 


ADDED : அக் 10, 2024 05:22 AM

Google News

ADDED : அக் 10, 2024 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் அக்., 4 ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோத்ஸவ விழா துவங்கியது. தினமும் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வெங்கடாஜலபதி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.

6ம் நாளான நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து காலை 11:00 மணி முதல் 12:00 மணிக்குள் ஸ்ரீதேவி, பூதேவி, வெங்கடாஜலபதி திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு 7:00 மணிக்கு யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து, தாயார் சன்னதியில் எழுந்தருளினார். அங்கு மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் 9 ம் நாளான அக்.,12 அன்று காலை 10:35 முதல் 11:25க்குள் தேரோட்டம் நடைபெறும். அக்., 14 ல் ஊஞ்சல் உற்சவத்துடன் பிரமோத்ஸவ விழா நிறைவு பெறுகிறது. கோயில் கண்காணிப்பாளர் சரவண கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் கருப்பையா ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us