sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

புரட்டாசி சனி உற்ஸவம் நிறைவு

/

புரட்டாசி சனி உற்ஸவம் நிறைவு

புரட்டாசி சனி உற்ஸவம் நிறைவு

புரட்டாசி சனி உற்ஸவம் நிறைவு


ADDED : அக் 13, 2024 04:39 AM

Google News

ADDED : அக் 13, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருமாள் கோயில்களில் தரிசனம்

திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் பகுதி பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி உற்ஸவம் நிறைவை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் சன்னதியில்

உற்ஸவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு காலை முதல் மதியம் வரை அன்னதானம் வழங்கப்பட்டது.

கல்லல் ஒன்றியம் கொங்கரத்தி நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மூலவர் நின்ற கோலத்தில் அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்ஸவர் கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் காலை 7:00 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் காலை 10:00 மணி அளவில்

உற்ஸவருக்கு அபிேஷகம் நடந்து, ஸ்ரீதேவி,பூதேவியுடன் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பக்தர்கள் காலை முதல்

சாமி தரிசனம் செய்தனர். திருக்கோஷ்டியூர்,கொங்கரத்திக்கு திருப்புத்தூரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us