sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை மருத்துவக்கல்லுாரியில் 'ராகிங்' புகார்: விசாரணை தீவிரம்

/

சிவகங்கை மருத்துவக்கல்லுாரியில் 'ராகிங்' புகார்: விசாரணை தீவிரம்

சிவகங்கை மருத்துவக்கல்லுாரியில் 'ராகிங்' புகார்: விசாரணை தீவிரம்

சிவகங்கை மருத்துவக்கல்லுாரியில் 'ராகிங்' புகார்: விசாரணை தீவிரம்


ADDED : டிச 15, 2024 12:37 AM

Google News

ADDED : டிச 15, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதாக முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் புகார் செய்ததால் நிர்வாகம் விசாரித்து வருகிறது.

இக்கல்லுாரி விடுதியில் தங்கி முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் படிகளில் ஏறும்போது பிரச்னை செய்வதாகவும், அடிக்கடி சட்டையை கழற்ற சொல்லி வற்புறுத்துவதாகவும்,மாணவிகளை இரவு 8:00 மணி வரை விளையாட்டு மைதானத்தில் விளையாட சொல்லி வற்புறுத்துவதாகவும் டிச.11ல் பல்கலை மானியக் குழு ராகிங் தடுப்புப் பிரிவுக்கு புகாரை இமெயிலில் அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில் ராகிங் தடுப்புப் பிரிவு அறிக்கை கேட்டு மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதன் தொடர்ச்சியாக நேற்று கல்லுாரி துணை முதல்வர் விசாலாட்சி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் மாணவர்களிடம் விசாரித்தனர்.

துணை முதல்வர் கூறுகையில்'' மாணவர்கள் புகார் குறித்து விசாரித்து வருகிறோம். கல்லுாரி முதல்வர் விடுமுறையில் உள்ளார். திங்கள் கிழமை(நாளை) அவர் வந்த பிறகு முடிவு எடுக்கப்படும் ''என்றார்.






      Dinamalar
      Follow us