sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரேஷன் அரிசி பறிமுதல்

/

ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : மார் 30, 2025 04:56 AM

Google News

ADDED : மார் 30, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : கோயம்புத்துார் மாவட்டம் பொள்ளாச்சி அருகே சுலேஸ்வரன் பேட்டையை சேர்ந்தவர் சச்சிதானந்தம் மகன் சித்தாதித்தன் 44. இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சோமநாதபுரம் சிவாஜி காலனியில் வசித்து வருகிறார்.

கடந்த ஒரு மாதமாக இங்கு தங்கியிருந்து சுற்று வட்டார பகுதியில் ரேஷன் அரிசியை சேகரித்தார்.

இந்த ரேஷன் அரிசியை தாராபுரம் ராஜ்குமார் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு சோமநாதபுரத்தில் இருந்து சரக்குவாகனத்தில் 35 மூடைகளில் 1,575 கிலோ ரேஷன் அரிசியை ஏற்றிக்கொண்டு தாராபுரம் சென்றார்.

திருப்பாச்சேத்தி அருகே சென்றபோது வாகன டயர் வெடித்து ரோட்டில் கவிழ்ந்தது.

மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

எஸ்.ஐ., திபாகர் தலைமையிலான போலீசார் சித்தாதித்தனை கைது செய்து வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us