ADDED : பிப் 23, 2024 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தேர்தல் வாக்குறுதி அளித்தபடி பொதுவினியோக திட்டத்திற்கு தனி துறை, குறைந்த பட்ச பென்ஷன், ஈட்டிய விடுப்பிற்கான சம்பளம் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொது செயலாளர் கே.ஆர்., விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மாயாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் திருஞானம், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் கவுரி, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், வட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.