ADDED : பிப் 19, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி, : சிங்கம்புணரி அருகே கொள்ளு விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எஸ்.புதூர் ஒன்றியத்தின் சில கிராமங்களில் விவசாயிகள் காணம் என்றழைக்கப்படும் கொள்ளு சாகுபடி செய்திருந்தனர். கடந்தாண்டு துவக்கத்தில் பொய்த்து பிறகு எதிர்பாராத நேரத்தில் காலம் மாறி பெய்த மழை காரணமாக கொள்ளு விளைச் இதை பிரஸ் பண்ணனும் சல் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து செட்டிக்குறிச்சி விவசாயி பழனி கூறியதாவது, 30 சென்ட் நிலத்தில் கொள்ளு விதைத்திருந்தோம் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு கொள்ளு பயிரிட்டோருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விளைந்த தானியத்தை வீட்டில் வைத்தே விற்பனை செய்கிறோம், என்றார்.

