ADDED : ஜூலை 29, 2025 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைப்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார்.
மாவட்ட இணை செயலாளர்கள் சின்னப்பன், கணேசன், பாண்டி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராஜா கோரிக்கையை விளக்கி பேசினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்க உரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் சதுரகிரி நன்றி கூறினார்.