sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பனையூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை சதி; 5 பேர் சிக்கினர்

/

பனையூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை சதி; 5 பேர் சிக்கினர்

பனையூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை சதி; 5 பேர் சிக்கினர்

பனையூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை சதி; 5 பேர் சிக்கினர்


ADDED : மார் 24, 2025 01:40 AM

Google News

ADDED : மார் 24, 2025 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அருகே பனையூர் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை அருகே சித்தலுார் விலக்கு வேதமுடைய அய்யனார் கோயில் நாடகமேடை அருகே ஒரு கும்பல் சந்கேத்திற்கு இடமளிப்பதாக கூடியிருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, எஸ்.ஐ., பிரேம்குமார் மற்றும் போலீசார் விரைந்து ஆயுதங்களுடன் இருந்த ஐந்து பேரை கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் பனையூர் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

திருப்புவனம் அருகே மேலராங்கியம் வேல்முருகன் 35, பெரியகோட்டை ராமையாராஜன் 37, சிவகங்கை ராஜேந்திரபிரசாத் தெரு பாண்டி 36, நாடிமுத்து 41, நேருபஜார் கருப்புச்சாமி 42, ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து வாள், அரிவாள், முகமூடி, கையுறை உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us