sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தையல் தெரிந்த 10 பேர் குழுவிற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி திட்டம் 

/

தையல் தெரிந்த 10 பேர் குழுவிற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி திட்டம் 

தையல் தெரிந்த 10 பேர் குழுவிற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி திட்டம் 

தையல் தெரிந்த 10 பேர் குழுவிற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி திட்டம் 


ADDED : நவ 10, 2025 12:23 AM

Google News

ADDED : நவ 10, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: பிற்பட்ட, மிக பிற்பட்ட, சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தையல் தொழில் தெரிந்த 10 பேர் கொண்ட குழுவிற்கு ரூ.3 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் தையல் தொழில் தெரிந்த, 10 பேர் கொண்ட குழுவினருக்கு, பொருளாதார மேம்பாட்டிற்காகவும், ஆயத்த ஆடை உற்பத்தி யூனிட் ஏற்படுத்திட ஒரு குழுவிற்கு (10 பேர் கொண்டு ஆண், பெண் குழு) ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. குறைந்தது 20 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். குழுவில் உள்ள உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும்.

குழுவில் உள்ள 10 பேர்களுக்கும் தையல் தொழில் நன்கு தெரிந்திருக்க வேண்டும். குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவன துறையில் பயிற்சி பெற்ற குழு மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண், ஆதரவற்ற விதவைகளால் அமைந்த குழுவிற்கு முன்னுரிமை தரப்படும். இந்த நிதி உதவியை பெற விரும்பும் குழுவினர், சிவகங்கை கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தில் உரிய ஆணவங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us