UPDATED : ஆக 29, 2026 06:09 PM
ADDED : ஆக 29, 2026 06:03 PM
சிவகங்கை:சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் வரவேற்றார். மாநில தலைவர் ரமேஷ் மாநாட்டை துவக்கி வைத்தார்.
மாவட்டச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் குணசேகரன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். மாநில துணைத் தலைவர் செல்வக்குமார், தமிழ்நாடு ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் மாநில அமைப்பாளர் குமரேசன், மாநில பொதுச்செயலாளர் வாசுகி, மாநில துணைத் தலைவர் துரைப்பாண்டி பேசினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் சகுந்தலா நன்றி கூறினார்.
