/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க கூட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க கூட்டம்
ADDED : பிப் 17, 2025 05:01 AM
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பெரியசாமி அறிக்கை வாசித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கையை விளக்கி பேசினார். ராமநாதபுரம் மாநில மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டது. சங்க உறுப்பினர்களை பாதுகாக்க வளர்ச்சித்துறை அறக்கட்டளை' துவக்குவது.
சாக்கோட்டை பி.டி.ஓ., ஊழியர்களை அவமதித்து பேசுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது. மாநில மாநாட்டு பிரசாரத்தை நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர். சங்க மாவட்ட, வட்டார, நகர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.