/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாடு
/
கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாடு
ADDED : ஆக 11, 2025 03:52 AM
சிவகங்கை: சிவகங்கையில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாடு நடந்தது. கோட்ட தலைவர் அம்பிகாபதி தலைமை வகித்தார். செயலாளர் செல்வன் முன்னிலை வகித்தார். கோட்ட உதவி செயலாளர் நாகராஜன் வரவேற்றார்.
அமைப்பு செயலாளர் செல்வராஜ் துவக்கி வைத்தார். கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க மாநில செயலாளர் சாந்தமூர்த்தி, மாநில தலைவர் ராமசாமி, அமைப்பு செயலாளர் சேகர், முன்னாள் மாநில செயலாளர் பாஸ்கரன் சிறப்புரை ஆற்றினர்.
கோட்ட செயலாளர் நடராஜன், கோட்ட தலைவர் மதிவாணன், கோட்ட உதவி செயலாளர் நாகலிங்கம், கோட்ட பொருளாளர் திருக்குமார், முன்னாள் கோட்ட செயலாளர் ராஜேந்திரன், மலைராஜ், பார்த்தசாரதி, மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோட்ட பொருளாளர் ரத்தினபாண்டியன் நன்றி கூறினார். சங்கத்தின் சார்பில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.