ADDED : பிப் 20, 2026 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் அருகே டிப்பர் லாரியில் ஆற்று மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்தனர்.
காளையார்கோவில் சொர்ணவள்ளி நகரை சேர்ந்தவர் கரண்குமார் 25. இவர் பருத்திக்கண்மாய் ரோடு ஐயுருளி
தச்சன்கண்மாய் பகுதியில் இருந்து ஆற்று மணலை ஏற்றி சென்றார். அந்த பகுதியில் ரோந்து சென்ற எஸ்.ஐ., வைரமணி தலைமையிலான போலீசார் கரண்குமாரின் வாகனத்தை சோதனை செய்தனர். சோதனையில் 5 யூனிட் ஆற்று மணலை ஏற்றிச்சென்றது தெரியவந்தது. கரண்குமாரை கைது செய்த போலீசார் மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

