ADDED : ஆக 14, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி, ; சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி போராட்டம் நடத்தியதை கண்டுகொள்ளாத தமிழக அரசை கண்டித்தும், போராட்டம் செய்தவர்களை கைது செய்ய உத்தரவிட்டதை கண்டித்தும் காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர தலைவர் முருகன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் மீனாள், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.