/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போதுமான பஸ்கள் இல்லாத காரணத்தினால் தினமும் பள்ளி,கல்லுாரி மாணவிகள்அவதி
/
போதுமான பஸ்கள் இல்லாத காரணத்தினால் தினமும் பள்ளி,கல்லுாரி மாணவிகள்அவதி
போதுமான பஸ்கள் இல்லாத காரணத்தினால் தினமும் பள்ளி,கல்லுாரி மாணவிகள்அவதி
போதுமான பஸ்கள் இல்லாத காரணத்தினால் தினமும் பள்ளி,கல்லுாரி மாணவிகள்அவதி
ADDED : ஜன 23, 2025 04:22 AM

மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம், முத்தனேந்தல்,கட்டிக்குளம், செய்களத்துார்,தெ.புதுக்கோட்டை, கீழப்பசலை,மேலபசலை,தீயனுார் அரிமண்டபம்,மூங்கில் ஊரணி,தெற்கு சந்தனுார் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான பள்ளி,கல்லுாரி மாணவிகள் தினந்தோறும் மாவட்ட தலைநகரான சிவகங்கைக்கு சென்று வருகின்றனர்.
காலை 7:00 மணி முதல் 8:30 மணி வரை 300க்கும் மேற்பட்ட மாணவர்களும் 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் சிவகங்கைக்கு சென்று வரும் நிலையில் காலையில் மானாமதுரையில் இருந்து போதுமான பஸ்கள் இல்லாத காரணத்தினால் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து மாணவிகள் கூறியதாவது: மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவிகள் சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லுாரியிலும்,மன்னர் ராஜா துரைசிங்கம் கல்லுாரியிலும், தனியார் கல்லுாரிகளிலும் படித்து வருகிறோம்.இந்நிலையில் மானாமதுரையில் இருந்து காலை 7:10 மணிக்கு மட்டும் மகளிர் பஸ் செல்கிறது.
இதனை விட்டால் அடுத்து பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்வதற்கு பஸ்கள் இல்லாத காரணத்தினால் ஒரே பஸ்சில் நிற்க கூட இடமில்லாமல் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகிறோம். நேற்று சிவகங்கைக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தந்ததையடுத்து வரக்கூடிய ஒரு சில பஸ்களும் வராததால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் போனது.
ஆகவே போக்குவரத்துக் கழக அதிகாரிகள் காலை நேரத்தில் மானாமதுரையில் இருந்து சிவகங்கைக்கும், மாலை நேரத்தில் சிவகங்கையில் இருந்து மானாமதுரைக்கும் போதுமான பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

