நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: முருகானந்த நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா வட்டார கல்வி அலுவலர் மாலதி தலைமையில் நடந்தது. ஆசிரியை பானு வரவேற்றார்.
தலைமையாசிரியை மீனாம்பிகை அறிக்கை வாசித்தார். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், கவுன்சிலர் விக்னேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர் போஸ், பள்ளி செயலர் முருகன் பேசினர். மாணவர்களுக்கு நகராட்சி தலைவர் பரிசு வழங்கினார்.
ஓய்வு பெறும் தலைமையாசிரியை மீனாம்பிகை கவுரவிக்கப்பட்டார். மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

