ADDED : பிப் 27, 2026 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: அழகிச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் சாஸ்தா சுந்தரம், ஆசிரியர் பயிற்றுநர் காளிராசா கண்காட்சியை தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் யோகேஸ்வரி நன்றி கூறினார்.

