sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

116 கிலோ புகையிலை குட்கா பறிமுதல்: கைது 2

/

116 கிலோ புகையிலை குட்கா பறிமுதல்: கைது 2

116 கிலோ புகையிலை குட்கா பறிமுதல்: கைது 2

116 கிலோ புகையிலை குட்கா பறிமுதல்: கைது 2


ADDED : ஜன 20, 2024 01:34 AM

Google News

ADDED : ஜன 20, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றக்குடி:பிள்ளையார்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் விற்ற வியாபாரி மற்றும் மொத்த வியாபாரியை தனிப்படை போலீசார் கைது செய்து 116 கிலோ பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பிள்ளையார்பட்டி பால் பூத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பதாக காரைக்குடி ஏ.எஸ்.பி., ஸ்டாலினுக்கு தகவல் கிடைத்தது.

தனிப்படை போலீசார் பால் பூத்தை கண்காணித்து வந்தனர். பால் வாங்குவதுபோல் வந்து பலர் பேப்பரில் மடித்து குட்கா பொருட்களை வாங்கி செல்வது தெரிந்தது. அங்கு போலீசார் நடத்திய சோதனையில், தண்டபாணி வைத்திருந்த 78 கிலோ புகையிலை மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரிக்கையில் கல்லல் ஒன்றியம் குருந்தம்பட்டு பழனிவேல் என்பவர் புகையிலைப் பொருட்களை தண்டபாணிக்கு விற்பனை செய்தது தெரிந்தது. பழனிவேல் வீட்டில் சோதனை செய்ததில் 38 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்த வியாபாரி பழனிவேல் மற்றும் தண்டபாணி கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us