நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெற்குப்பை: திருப்புத்துார் ஒன்றியம் ஆ.தெக்கூர் சிங்கை சித்தர் அய்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
பேராசிரியை கீர்த்திகா வரவேற்றார். முதல்வர் உமா தலைமை வகித்தார். சிங்கம்புணரி போக்குவரத்து ஆய்வாளர் ரோஸ்லெட் சாலை பாதுகாப்பு விதிமுறைகள், போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். பேராசிரியை பிரபாவதி நன்றி கூறினார்.