ADDED : பிப் 01, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதுகலை வணிகவியல் துறை சார்பாக உயர்கல்வி பயில்வோருக்கு வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
துறைத்தலைவர் நாசர் வரவேற்றார். முதல்வர் ஜபருல்லாகான் தலைமை வகித்தார்.
ராமநாதபுரம், செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி மேலாண்மைத்துறை பேராசிரியர் மெய்கண்டன் கணேஷ் குமார், இணைப்பேராசிரியர் ஜெயபாலன் உயர்கல்வி பயில்வதன் முக்கியத்துவம் குறித்தும், வேலைவாய்ப்பு குறித்தும் பேசினர்.
உதவிப்பேராசிரியர் அருள் சேவியர் விக்டர் நன்றி கூறினார்.